சதுரகிர மகாலிங்கமலை என்றால அனைவருக்கும் தெரியும் அம்மலைக்குள் இன்னும் எவ்வளவோ ரகசியங்கள் உள்ளன பலவித வழிகள் உள்ளன பலவித இடங்கள் உள்ளன அவற்றில் ஒன்று
பெருமாள் மொட்டை இது அனைவரும் கண்டிராத மலை. இது ஏறத்தாழ கடல் மட்டத்திலிருந்து 6000 அடிக்கு மேல் பறந்து விரிந்துள்ளது. இங்கு பெருமாள் காட்சியளிக்கிறார். கிட்டத்தட்ட சதுரகிரி சந்தன மகாலிங்கம் மற்றும் தவசி பாறையிலிருந்து பன்னிரண்டு கிலோமீட்டர் மேல்நோக்கி அடர்ந்த மலைப்பயணம் செய்ய நாம் இந்த பெருமாள் மொட்டை மலையை வந்தடையலாம். வழியில் நாம் பெரிய மகாலிங்கம், தவசிபாறை, வெள்ளை விநாயகர், வன பத்ர காளியம்மன், எம வனம், யான கசை, ஆகாயத்தில் நவகிரக பீடம் ஆகியவற்றை கடந்து நாம் பெருமாள் மொட்டையை அடையலாம். இனி இந்த பெருமாள் மலையின் சிறப்புகளையும், பயணத்தின் போது நான் கண்ட சில சதுரகிரி மூலிகைகளையும் இங்கே காண்போம்.
ஜோதி விருட்சகம்
சித்தர்களின் ஆபூர்வ மூலிகைகளின் ஒன்றான ஜோதி விருட்சம் (உரோம விருட்சகம்) வனம் இங்கு உள்ளது தான். ஒன்றான ஜோதி விருட்சக மரத்தின் படத்தையும் இங்கே பகிர்ந்துள்ளேன். இதனுடைய ஆபூர்வ குணங்கள் இதன் அடியில் இருக்கும் பாறைகளின் நிறமும் கூட பசுமையாக காட்சி தருகிறது. இதன் அருகில் நாம் அமர்ந்தால் பசி, தாகம், மன உலைச்சல் போன்ற சிந்தனைகள் வராது. இந்த அபூர்வ மரத்தில் வருடத்தில் ஒரு முறை மட்டுமே பூத்து கனியாகின்றது. இந்த கனிகளை பறவைகளும், விலங்குகளும் விரும்பி சாப்பிட . இதை அறிந்த காட்டுவாசிகள், மலைவாழ் மக்கள், அப்பழங்களை பறித்து சாப்பிடுவார்கள்,
இந்த கனிகளை போன்று எந்த கனிகளை பறவைகள், மிருகங்கள், விரும்பி சாப்பிடுகிறதோ அதை அறிந்த பின்புதான் சாப்பிட ஆரம்பிப்பார்கள்.இது போன்ற பல கனிகளை உன்பதால் இவர்களுக்கு வயது முதிர்ந்தாலும் உடல் தோற்றம் இளமையாகவே காணப்பட்டு உடல் சுருக்கம் இல்லாமலும், தலைமுடி நரைக்காமலும், முடி உதிராமலும், கண்பார்வை 100 வயது ஆனாலும் கண்ணாடி இல்லாமலே பார்வை குறையாமல் இருக்கும் இதற்க்கு காரணம் இயற்க்கையே!!!
அபூர்வ ஆஞ்சநேயர்
நங்கள் சனிகிழமை காலை பெருமாள் பிரார்த்தனைக்குத் தேவையான ஏற்பாடுகளைசெய்து கொண்டிருந்தோம்.அப்பொழுது தண்ணிர் எடுக்க சென்ற போது தான் வேரிலேயே இயற்கையாக உருவான அந்த அஞ்சநேயரைக் கண்டு மெய்சிலிர்த்தோம். என்னே ! அற்புதம் இறைவனது படைப்பில், நாங்கள் அனைவரும் புண்ணியம் செய்தவர்களாக கருதினோம். அத்தகைய அதிசியத்தையும் இத்துடன் இணைத்துள்ளேன். நீங்களும் அருள் பெருக. இதில் ஆஞ்சநேயர் தண்டயும் ஏந்தியும் அவரது வாலானது இரண்டு சுருள்களாக சுருண்டும் காட்சியளிக்கிறார்.
பெருமாள் மொட்டையில் தீபம் ஏற்றுதல்
ஒவ்வொரு சனிக்கிழமையும் புரட்டாசி மாதத்தில் பெருமாள் மொட்டை மலையில் ஏற்றிய தீபத்தைப் வணங்கிய பிறகு தான் சனிக்கிழமை விரதத்தையே முடிப்பர் என்பது வரலாறு. அத்தகைய சிறப்பு மிக்க தீபம் ஏற்றுவதைத் தான் நாம் காண்கிறோம்.
யானை கசை
யானை கசை என்பது சிறிய குளம் போன்று தோற்றமளிக்கும். உண்மையில் யானைகள் இங்கு தான் உறவு கொள்ளுமாம். இங்குள்ள நீரை பருகினால் மகப்பேறு கிட்டும் என்று பெரியவர்கள் சொல்ல யானை கசை பெயர்க்காரணம் காரணம் புரிந்தது.
எமவனம்
இது மிகவும் அடர்த்தியான வனத்தைக் கொண்டதனால் இவ்வாறு அழைக்கபடுகிறது. ஏறத்தாழ சதுரகிரி மலைக்கும் பெருமாள் மலைக்கும் இடையே பன்னிரண்டு கிலோமீட்டர் பயணம் செய்ய வேண்டியிருந்தது.ஒருமுறை வழி தவறினால் கூட கட்டுக்குள்ளேயே சுற்றிகொண்டிருப்போம்.
கர்ப்ப (கற்ப) சஞ்சீவி மரம்
குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் அடைய செய்யும் இந்த கற்ப சஞ்சீவி மூலிகை.நான் மலைப்பயணம் தொடங்கும் முன்பு குறிப்பிட்டதைப் போல மூலிகை பற்றிய தேடலில் கொண்ட எதிர்பார்ப்பை இது பூர்த்தி செய்வதாக அமைந்தது இந்த பயணம்.
பெரிய மகாலிங்கம்
சுமார் ஐம்பது அடி உயரம் கொண்ட சுயம்புவாக காட்சியளிக்கிறார் பெரிய மகாலிங்கம். அவரின் பின்பகுதியில் சடைகள் போல இயற்கையாகவே மரத்தின் வேர்கள் பின் பின்னைந்துள்ளதை நாம் கண்கூடாக காண முடியும்.
இது அனைவருக்கும் காணக்கிடைக்காத தவம்.சமீப காலமாக அனுமதி மறுக்கப்பட்டுள்ளதால் பாதை மிகவும் சீரழிந்துள்ளது.
சித்தர்கள் அருள்
பெரிய மகாலிங்கம் ,சதுரகிரி இடையே பயணத்தில் நான் ஒரு ஆரஞ்சு மரத்தையும் அதில் ஒற்றைப் அரஞ்சு பழம் கிடைத்ததை பெரும் பாக்கியமாக கருதுகிறேன்.மேலும் வேரில் சுயம்புவாக காட்சியளித்த ஆஞ்ச நேயர்,எனக்கு கிடைத்த பெரிய மகாலிங்கம் வடிவில் கிடைத்த சிறிய மகாலிங்கம், ஏறுசிங்கி, இறங்கு சிங்கி, கற்ப சஞ்சீவி, வெள்ளை நாவல் முதலிய மூலிகைகளையும், சித்தர்களின் அருளிசியுடன் காணலாம்.