கருவறையில் இருக்கும் மகாலிங்கம் போலவும், உடம்புக்கு உயிர் போலவும் விளங்குவது சிவநாமம். வேதங்களின் மத்தியில் ஜீவரத்தினமாகவும் திகழ்கிறது.பாவத்தை கணப்பொழுதில் காணாமல் போகச் செய்யும் பொருள் ஒன்று இருக்கிறது. அதைத் தேடி எங்கும் அலைய வேண்டாம். இரண்டு எழுத்துக்களால் ஆன சிவ என்னும் நாமமே அது. சிவநாமத்தை சொல்ல தகுதி என்ன வேண்டும் என்று கேட்டால், மனிதனாகப் பிறந்த யாரும் அதைச் சொல்லலாம். நாக்கு இருந்தால் மட்டும் போதும்.சிவ என்று சொல்லாதவரைக் கண்டால், சிவநாம மகிமையை உணராத இவனுக்கு நாக்கு கொடுத்து பயனில்லை என்று கடவுள் திரும்பி வாங்கிக் கொண்டு விடுவான்.கோயிலுக்குச் சென்று சிவ பெருமானை நேரில் பார்த்து நமஸ்காரம் பண்ண வேண்டாம். ஹர ஹர மகாதேவா என்று இருக்கும் இடத்தில் இருந்து கொண்டே யாரும் எப்போது வேண்டுமானாலும் சொல்லலாம்.ஹர ஹர மகாதேவா என்ற நாம ஒலி, இந்த உலகம் முழுதும் நிறையச் செய்ய வேண்டும். இந்த நிலையை அடைந்து விட்டால், உலகிலுள்ள தீய
சக்திகள் யாவும் ஒழிந்து விடும்.நமக்கு கஷ்டம் ஏதும் வந்து விட்டால், உதவி செய்யக் கூடிய யாரையாவது தேடி அலைகிறோம். சிவாய நம என்று சிந்தித்துஇருந்தால் அபாயம் ஏதுமில்லை என பெரியவர்கள் நமக்கு வழிகாட்டியிருக்கிறார்கள்.
தயாளமும், கருணையும் நிறைந்தவர் சிவன். அறுபத்து மூன்று நாயன்மார்களில்எத்தனையோ பாமர வாழ்வு நடத்திய எளியவர்களும்சிவனருளால் நற்கதி அடைந்துஇருக்கிறார்கள்.அனைவரும் எளிதில் அணுகக் கூடிய சிவபெருமானை நினைத்து, மனம் உருகி கரைந்து கண்ணீர் பெருக்கினால், பிறவி சக்கரத்தில் இருந்து நம்மால் விடுபட முடியும்.எல்லா உயிர்களுக்கும் தாயும் தந்தையுமாக இருப்பவர் சிவனே. உலகிற்கெல்லாம் தாயும்தந்தையுமாக இருக்கும் பார்வதி பரமேஸ்வரரை வணங்குகிறேன் என்று மகாகவி காளிதாசர்ரகுவம்சத்தின் முதல் மங்கள ஸ்லோகத்தில் பாடியிருக்கிறார். ஒரே சர்க்கரையால் பல இனிப்புகள் செய்வது போல, ஒன்றாக இருக்கும் சிவமேஉலகிலுள்ள அத்தனைபொருளுமாக ஆகியிருக்கிறது. மனம் பாவச் செயலில்ஈடுபடாமல் இருக்கவும்,முன்வினைப் பாவம் அடியோடு நீங்கவும் எப்போதும் சிவனை தியானிக்க வேண்டும். ஈஸ்வர தியானமே வாழ்வின் நம் அன்றாடப் பணியாக இருக்க வேண்டும்.எருக்கு, தும்பை, ஊமத்தை இந்த மூன்று பூக்களும்சிவனுக்குப் பிரியமானவை. உலகில் எத்தனையோ மலர்கள் இருந்தாலும், மணமோ, விலையோ இல்லாத இந்த மலர்களை விரும்புவது, அவரின் எளிமையைக் காட்டுகிறது.அன்பெனும் பிடிக்குள் அகப்படும் மலையேநற்றுணையாவது நமச்சிவாயவே என்றெல்லாம் அருளாளர்கள் சிவனை திருமுறைகளில் துதி செய்திருக்கிறார்கள். நாமும் அம்மையப்பரான சிவனின்திருவடிகளை எப்போதும் சிந்தித்து நல்வாழ்வு பெறுவோம்.
No comments:
Post a Comment