Tuesday, 22 November 2016

பக்தனை சோதித்த நெல்லையப்பர்.

★பாண்டிய நாட்டை முழுவதும் கண்ட ராமபாண்டியன் ஆட்சி செய்யும்போது, ஒரு முறை கடுமையான பஞ்சம் ஏற்பட்டது. அக் கால கட்டத்தில் வேணுவனமாகக் காட்சியளித்த திருநெல்வேலியில் வேத பட்டர் என்ற சிவபக்தர் சிவபெருமானை வணங்கி தினமும் சுவாமிக்கு செந்நெல் அறுத்து அமுதாக்கி பூஜை செய்து வந்தார்.

★பஞ்ச காலத்தின்போது சிவபெருமான், வேத பட்டர் என்னும் தன் அடியாரின் பக்தியை சோதிக்க விரும்பி சிவபெருமான் அவரை வறுமையில் சிக்கச் செய்தார். வேத பட்டர் ஒரு நாள் வீடுவீடாக நெல் சேகரித்து கோயில் சன்னதி முன் உலரச் செய்துவிட்டு நீராடச் சென்றார்.

★அப்போது திடீரென மழை பெய்தது. இதைப் பார்த்த வேதபட்டர் "இறைவனுக்கு அமுது படைக்க உலர வைத்த நெல் என்ன ஆனதோ'' என்று கலங்கிய படி கோயிலுக்கு ஓடோடி வந்தார். ஆனால், அங்கு உலரப் போட்டிருந்த நெல்லைச் சுற்றியே மழை பெய்ததே தவிர நெல்லின் மீது வெயில் அடித்தது.

★இதைப் பார்த்த வேத பட்டர் மெய்சிலிர்த்தார். தான் கண்ட காட்சியை மன்னனிடம் தெரிவித்தார். மன்னனும் அக் காட்சியைப் பார்த்து பக்தியில் உருகினான். பின்னர் நெல் மட்டும் நனையாது காத்த பரம்பொருளே இன்று முதல் #நெல்வேலி_நாதர் என்று அழைக்கப்படும் என்று தெரிவித்தார். இந்த பெயர் நாளடைவில் நெல்லையப்பர் என்று பக்தர்களால் அழைக்கப்படலாயிற்று.

★இதே போல ராமக்கோன் என்னும் பக்தர் வேணுவனம் வழியாக அரசனுக்கு பால் கொண்டு செல்லும்போது மூங்கில் முளையால் கால் இடறி பால் தினமும் கொட்டி வந்தது. ஒரு நாள் கோபத்தின் எல்லைக்கே சென்ற ராமக்கோன் அந்த மூங்கில் முளையை கோடாரியால் வெட்டினார்.

★அப்போது அதிலிருந்து ரத்தம் பெருக்கெடுத்து ஓடியது. இதைப் பார்த்து பயந்த ராமகோன் மன்னன் ராமபாண்டியனிடம் தான் கட்ட காட்சியைக் கூறினார். மன்னன் அங்கு விரைந்து வந்த பார்த்த போது சிவபெருமான் அங்கு லிங்கம் வடிவில் காட்சிக் கொடுத்தார்.

No comments:

Post a Comment