கோயிலில் சிவன், சக்தி, விநாயகர், சுப்ரமணியம் வைத்திருப்பதற்கு விளக்கம் என்ன?
நமது ஜீவனை குருவின் அருளாலும் பயிற்சியாலும் சிவனாக்க வேண்டும். குருவின் தீட்சையால் நெற்றிக்கண் திறந்து ஜோதி தரிசனம் கிடைக்கும். சக்தி என்ற மனம் அறிவு என்ற சிவனோடு சேரும் போது மாயசக்தி மறைந்து, கிரியா சக்தியாக மாறி, ஜீவசக்தி கூடி ஞான ஒளியாக நம்மில் பிரகாசிக்கிறது. உண்மையான பக்தர்களுக்கு இது கிடைக்கும்.
விநாயகர் என்பது உடல் கூறைக் குறிக்கும். முருகன் என்றால் மும்மலத்தை வென்றவன். மும்மலத்தை வென்றபின் தான் சுப்ரமணியமாக இருப்பார். சுப்ரமணியம் என்றால் குருவின் தயவால் சற்குருவை அறிந்து உணர்ந்து தனக்குள்ளே கோயில் அமைத்து அவரை வழிபடுவதாகும். சற்குருதான் பிரம்மம். சுத்த பிரம்மத்தை உணர்ந்தவரே சுப்ரமணியம்.
சிரசு கர்ப்ப கிரகம்
கழுத்து அர்த்த மண்டபம்
மார்பு மகா மண்டபம்
நாடி யாக சாலை
பாதம் கோபுரம்
வாய் கோபுரம்
உள்நாக்கு கொடிமரம்
பஞ்ச இந்திரியங்கள் தீபங்கள்
இதயம் கர்ப்ப கிரகம்
உயிர் மகாலிங்கம்

No comments:
Post a Comment