1. நீராடி தூய ஆடை உடுத்தித் திருநீறு அணிந்து முடிந்தால் ருத்ராட்சமும் அணிந்து செல்ல வேண்டும்.
2. மலர், தேங்காய், பழம், பூ, சூடம் ஆகிய இவற்றுள் அவரவர் வசதிக்கேற்ப இயன்றவைகளை எடுத்துச் செல்ல வேண்டும்.
3. கோபுரத்தைக் கண்டவுடன் இரு கைகூப்பி வணங்க வேண்டும்.
4. நமச்சிவாய ஐந்தெழுத்தை மனதில் ஜபித்தவாறே செல்ல வேண்டும்.
5. தல விநாயகரைத் தரிசித்துக குட்டிக் கொண்டு தோப்புக் கரணம் போட்டுக் கொண்டு செல்ல வேண்டும்.
6. பலி பீடம், நந்தி ஆகியவற்றை வணங்கிச் செல்ல வேண்டும்.
7. உள்ளே மூலமூர்த்தியை வணங்கிச் சுற்றிலுமுள்ள உற்சவ மூர்த்திகளையும் சண்டேசுவரரையும், பிற சந்நிதிகளையும் வணங்க வேண்டும்.
8. திருநீற்றினை இருகையால் பணிவுடன் பெற்றுக்கீழே சிந்தாது அணிந்து கொள்ள வேண்டும்.
9. ஆலயப் பிரகாரத்தை மும்முறை வலம் வர வேண்டும்.
10. தரிசிக்கும் காலத்தில் சந்நிதிகளுக்கு ஏற்ப துதிப் பாடல்களைச் சொல்லி வழிபடுதல் வேண்டும்.
11. வெளியே வந்து கொடி மரத்தின் கீழ் வீழ்ந்து வணங்க வேண்டும்.
12. சிறிது நேரம் அமர்ந்து அவரவர் நிலைக்கேற்ப தியானம் செய்து பின் அங்கிருந்து புறப்பட்டுச் சிவ சிந்தனையோடு செல்ல வேண்டும்.
[11/26, 1:43 AM] +91 97893 99378: சிவ வணக்கம் முத்து அய்யா.
இந்த புலனம் "உலகிற்கு சைவத்தை அறிவித்து அனைவரும் சிவத்தை அடைய வேண்டும் என்ற உன்னத நோக்கோடு அவன் அருளால் தொடங்கப்பட்டு, செயல்பட்டு வருகிறது.
இதில் அனைத்து அடியார்களின் சைவ பதிவுகளையும் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம் அய்யா.
தாராளமாக அனைத்து அடியார் பெருமக்களும் தாங்கள் சைவ கருத்துகளை பதிவிடலாம் அனுமதி தேவை இல்லை.
"அடியார் பெருமக்களுக்காவே புலனம்"
சிவ சிவ
No comments:
Post a Comment